Pages

Wednesday, August 25, 2010

இரண்டு சிரிப்புகளின் முடிவில்... ..

அபத்தமான கேள்விகளின் விளிம்பில்
அகப்படுவது நானானபோதிலும்.
விக்கிரமாதித்தன் வேதாளமாய்
கேள்விகள் என்னை விடுவதாயில்லை!!

ஒரு நாளின் உதிரும் மாலையில் உன்னைக் கேட்டேன்...
என் மனைவியை எப்படி வரைந்து வைத்தேன் தெரியுமா? -என்று
நீ சதாரணமாய்ச் சிரித்தாய்..

நானறிந்த இலக்கியமும்,
நன்கறிந்த சினிமாவும் கற்பனையில் ஊற ஊற
நானேதோ உளறியது நினைவில் இல்லை..

வினாடியின் விளிம்பில்
என் வாயில் வழிந்தது கேள்வி மீண்டும் ..

உனக்கு வரும் கணவனை......
கேள்வியை நான் முடிக்க முன்னும்
நீ சிரித்தாய்..

அது சாதாரணமாய் தோன்றவில்லை எனக்கு

No comments:

Post a Comment