சொல்லின் நிழலில் தூங்கும்
மௌனங்கள்
வெளியறத் தவிக்கும் தருணமொன்றில்
புரிதல் அற்ற பெருவெளியில்
புன்னகைகள் காய்ந்திருக்கும்
பொழுதொன்றில்
அவமானங்கள் வழிந்திருக்கும்
முகமதனை - விம்பமிட எந்த ஆடியும்
மறுக்கும் ஒரு கணத்தில்
சொல்லாமல் சேர்த்த சொல்லெல்லாம்
பூப்பெய்தி பின் புனிதங்கள்
கலைந்திருக்கும் காலமொன்றில்
ஒரு வார்த்தை தன்னை பேசிவிட துடிக்கிறது தயக்கங்களுடன்..