Pages

Tuesday, June 9, 2009

ஊமை வாக்குமூலங்கள்!

சொல்லின் நிழலில் தூங்கும்
மௌனங்கள்
வெளியறத் தவிக்கும் தருணமொன்றில்

புரிதல் அற்ற பெருவெளியில்
புன்னகைகள் காய்ந்திருக்கும்
பொழுதொன்றில்

அவமானங்கள் வழிந்திருக்கும்
முகமதனை - விம்பமிட எந்த ஆடியும்
மறுக்கும் ஒரு கணத்தில்

சொல்லாமல் சேர்த்த சொல்லெல்லாம்
பூப்பெய்தி பின் புனிதங்கள்
கலைந்திருக்கும் காலமொன்றில்

ஒரு வார்த்தை தன்னை பேசிவிட துடிக்கிறது தயக்கங்களுடன்..