Pages

Tuesday, August 31, 2010

திருமண வரவேற்பு தின வாழ்த்துக் கவிதை - சுதன் மதனிகா (23 .01 .2010)

பசை பூசிய ஞாபகச் சுவரெங்கும் நம் நட்பு மின்மினிகள்
அசை போடும் தருணங்களில்
அலையாகிறது நாம் இருந்த நிமிடங்கள்
துணை கொள்ள பிரியமான தோழன் சுதன் - மதனியோடு இணைகொண்டு சுகம் சேரும் நாளிது!

கவி கொண்டு வாழ்த்தினோம்!
நூறும் புகுக நலம் நாளும் மிகுக,
நற்றமிழெனவே அணி கொண்டு வாழ்க!

மாலையில் இணைந்தது இரண்டு மனங்கள்
நாணங்கள் இனித் தொடர்கின்ற தினங்கள்
நல்ல பேச்சு நலமான சிரிப்பு - வல்லமை உந்தன் எழுத்து
வில் வளைத்து வென்றனன் நங்கை - வாழ்த்துகள்

மதிமுகத்து மங்கையாம் மதனிகா
மதி நிறைந்த மணவாளன் சுதன்
மனதிணைந்த மணவிழாக்காட்சி
உங்கள் மகிழ்வுக்கிலக்கணம் மாங்கல்யசாட்சி

இவனோடு இவளாகி ...
சிவனோடு உமையாகி
சிறப்பான துணையாகி -
சீர் மிகுந்து நீர் வாழ்க

கவினூறும் பதினாறும் கொள்க!
கலைகொள்ளும் திறன்யாவும் வெல்க
உடலோடு உயிர்
கொண்டுறைக உங்கள்உளம்நாளும் இனிதாலே மல்க

அனுதினமும் நீங்கள் அன்றிலின் சிறகுகள்
உங்கள் அன்புக்கில்லை அடைக்கும் கதவுகள்
தாள் திறக்கும் காதலின் சாகரம் வாழ்வில்
இன்பத் தளிர் துளிர்க்கும் கைகளில் சீக்கிரம்

வாழ்த்துகள் வந்து நிதம் உம்மைப் பாடும்
வருங்காலம் வாழ்க்கைக்கோர் உவமை கொள்ள உம்மை தேடும் -

வாழ்க வாழ்க வாழ்கவென நெடிது வாழ்த்தி - விடைபெறும் நண்பர்கள் நாம்

No comments:

Post a Comment