Pages

Thursday, September 16, 2010

மறுத்து எழுதல் 01

விரலிடுக்கில் ஒட்டிக்கொண்டு
பின்பொரு உதறலில்
தூரச்சென்று விழுந்தாலும்
விழிச்சுழலின் மையமெனத்தாலும்
நினைவூறிப்புதைந்தாலும்
உங்கள் முன்பு
உடைந்தாலும் கிழிந்தாலும்
வேண்டுமிங்கே ஒரு விம்பம்
எனக்கு

வரிசையாய் எழுகின்ற
உங்கள் முகங்களுக்குத்
தப்பி எதையும் எழுதிவிட
என்னால் முடியாது
ஒரு தலையாட்டியின்
மொழிக்குத் தவறிய உணர்வோடு
என்
சுதந்த்திரத்தை
கைது செய்கிறீர்கள்

என் சொற்கள்
இலை தின்ற புழுக்களாய்
கொழுத்துக் கிடந்தன
பின்
வனப்பேறிய சிறகுகள்
உதிர்ந்து கிடக்க
பெயர்ந்தன

எல்லாம் தாண்டி எழுகின்ற பாடலும்
என்னக்குள்ளே புதைக்கிறது
எல்லாத்துளைகளும் சிலந்திக்கொட்டுகளாக
வலை பாவி கிடக்கிறது
நினைவு இழந்த கவிதை ஒன்று
சிலந்தி வாயில் சுரக்கிறது

ஒரு சிறகுதிர்த்த
ஈசலின் உடல் வரியில்
எழுதப்பட்டிருக்கிறது எனது பாடல்
திசை மறந்த ஈசலை
நசுக்கும் போதொன்றில்
கொல்லப்படும் அவை குறிப்பிழந்து..

எல்லாவற்றின் பின்னும் பின்னும்
வரும்
சிறகுதிர்த்த ஈசலின் பயணம்

No comments:

Post a Comment